News
சிகரெட்டுகளுக்கு 75 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என COPF தலைவர் ஹர்ஷா டி சில்வா பாராளுமன்றில் கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட வரி குறைந்து வருவதாகவும், சிகரெட் வரி தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா இன்று தெரிவித்தார்.
சிகரெட் வரி மூலம் கிடைக்கும் அரசாங்க வருவாய், நிறுவனத்தால் கிடைக்கும் வருவாயை விடக் குறைவு என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிகரெட்டுகளுக்கு வரி விதிக்கப்படும் முறைமை தவறானது என்று கூறிய எம்.பி., சிகரெட்டுகளுக்கு 75 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என்றும், இது WHO மற்றும் UNDP-யால் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.
சிகரெட் மீதான வரியை மறுபரிசீலனை செய்யவும், இந்த விஷயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய முடிவை எடுக்கவும் அவர் முன்மொழிந்தார்.

