News

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை

மாத்தறை, தேவுந்தர, சிங்கசன வீதியில் நேற்று (21) இரவு இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை துப்பாக்கிதாரி வந்ததாக கூறப்படும் வேன் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.



Update -:

மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று,  பின் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 துப்பாக்கிக்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.



துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய  இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button