“இந்தியன் ஹட்” உணவக தாக்குதல் விவகாரம்: வாடிக்கையாளர்களைத் தாக்கிய முகாமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்க மறியல்

காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ (Indian Hut) எனும் உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் சேர்ந்து – குடும்பமாக வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மேற்படி 11 பேரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி இரவு, குறித்த உணவகத்துக்கு குடும்பமாக வந்திருந்தவர்களுக்கும் உணவருந்திய ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் – பின்னர் மோதலாக மாறியது.
இந்த சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறார்களும் உள்ளடங்கலாக 06 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில்ட காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

