News

பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் செய்கிறார் !

பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றம் புத்த பிக்குகளிடம் சரணடையும் போது, குண்டர்கள் தங்கள் பிழைகளை மறைக்க ஓடி ஒளிக்கும் இடம்தான் இவ்வாறான மதஸ்தானங்கள் என்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.

ஆனால் அவர் தற்போது புத்தரின் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் முன்னிலை வகிக்கின்றார். ஆனால் எமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுர தற்போது கவனம் செலுத்துகின்றார் .

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டமும் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டமும் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button