News

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 19 வயது இளைஞன் பலி #கல்கிஸை

கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிந்த இளைஞன் தெஹிவளை – ஓபன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button