மோட்டார் சைக்கிள் விபத்தில் கந்தளாய் பிரதேச ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கந்தளாய் யூசுப் — Hasfar A Haleem
தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் பலி; தப்பி ஓடிய வாகனம் தேடப்படுகிறது
திருகோணமலை கந்தளாயைச் சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை கபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான இவர், ரத்னபுரயில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
பொலிஸார் தெரிவிக்கையில், ப்ரியான் மலிந்தவின் மோட்டார் சைக்கிள் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதால், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து கபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

