News

மஹிந்தானந்தவும் நளின் பெர்னாண்டோவும்  கேரம் போர்ட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை – அவற்றை மக்களுக்கு வழங்கிய காரணத்தினாலே தண்டிக்கப்பட்டுள்ளர்கள் ; திலீத் ஜெயவீர

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ தண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கரம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



அவர்கள் இருவரும் இந்த கரம் போர்ட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்து அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறும் வரையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருடர்களுக்கு தண்டனை விதிப்பது சிறந்த விடயம் எனவும் அதன் ஊடாக மக்களுக்கு ஏதேனும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

களவாடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கரம் மற்றும் தாம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button