News

புதிதாக பதவியேற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தலைவர் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி  அகுரஸ்ஸ நகரையே சுத்தப்படுத்திய நிகழ்வு

சுற்றடல் தினத்தை முன்னிட்டு அகுரஸ்ஸ நகரில் பாரிய துப்புரவு நடவடிக்கை

சுற்றடல் தினத்தை முன்னிட்டு, அகுரஸ்ஸ பிரதேச சபையின் ஏற்பாட்டில், அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து, அகுரஸ்ஸ நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்தும் பிரமாண்ட சிரமதான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

புதிதாக பதவியேற்ற அகுரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் சமன் குமார சுரவீர, உப தலைவர் எச்.கே. ஜயந்த உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், சபை ஊழியர்கள், மக்கள் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், மாளிமாவ பிரிவு சபைகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றது சிறப்பம்சமாக அமைந்தது.

புதிய தலைவர் மற்றும் அவரது குழுவினர் பணியை தொடங்கியவுடன், ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நகரில் குவிந்திருந்த குப்பைகளை விரைவாக அகற்றினர்.

துர்நாற்றம் வீசிய வடிகால் அமைப்புகளை உடனடியாக சீரமைத்து, நீர் வெளியேறும் வகையில் புனரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கொடபிட்டிய தேசிய பாடசாலையின் சுற்றுச்சூழல் முன்னோடி இளைஞர் குழு, ஆசிரியர்களுடன் இணைந்து இந்த சி ரமதான நிகழ்வுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button