News
இராஜினாமா கடிதத்தை கையளித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய விவகாரங்கள் தொடர்பில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக, காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

