News

இன்று காலை 156 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

**விமானத்தில் குண்டு மிரட்டல்: தாய்லாந்தில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்**



தாய்லாந்தின் புரூகெட்டில் இருந்து இந்திய தலைநகர் புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டதாக (வெள்ளிக்கிழமை) மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, புரூகெட் தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏர் இந்தியாவின் AI 379 விமானத்தில் பயணித்த 156 பயணிகள் அனைவரும், அவசர திட்டங்களின்படி விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாய்லாந்து விமான நிலையங்களின் (AOT) அதிகாரி ஒருவர் கூறினார்.

விமானம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (இந்திய நேரப்படி 8:00 மணி) புரூகெட்டில் இருந்து புது டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால், ஆந்தமான் கடல் பகுதியில் ஒரு பெரிய வட்டமடித்து, மீண்டும் தெற்கு தாய்லாந்து தீவில் தரையிறங்கியதாக Flightradar24 தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், வியாழக்கிழமை அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி, 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்தை அடுத்து நிகழ்ந்துள்ளது.

குண்டு மிரட்டல் குறித்த விவரங்களை AOT வெளியிடவில்லை. ஏர் இந்தியா நிறுவனமும் இதுகுறித்த கருத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

கடந்த ஆண்டு, இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஆயிரத்திற்கு அருகில் போலி குண்டு மிரட்டல்கள் வந்ததாகவும், இது 2023-ஐ விட 10 மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker