News

வடக்கில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது

வடக்கில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 1.15 அளவில் இந்த தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல் துறை ஊடகப் பேச்சாளர் என்.யு. உட்லர் தெரிவித்தார்.

இருப்பினும், வடக்கில் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்திவருவதாக காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button