News

நாங்கள் (அமெரிக்கா) ஆயுதப் படைகளின் முழு வலிமையுடன் தாக்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்தது.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்க நினைத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் இராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.





இந்த நிலையில், ஈரான் மீது நேற்று (14)  இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் ஏதேனும் நடத்தினால், இதுவரை கண்டிராத அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு வலிமையும், ஈரான் மீது செலுத்தப்படும்.

இருப்பினும், இஸ்ரேல் – ஈரான் போரை மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button