News

இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது எனவும்  G7 தலைவர்கள் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜி7 தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக ,



இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது என்பதை நாங்கள் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறோம். அத்தோடு இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



தீவிரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக ஈரான் உள்ளது.



காஸா பகுதியில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கை தடுப்பதற்கு ஈரான் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button