News

அதிஷ்டமும் NPP பக்கம் – தெஹியோவிட்ட பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சமனசிரி வீரசிங்க, சீட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்று தவிசாளர் பதவியை கைப்பற்றினார்.

**தெஹியோவிட பிரதேச சபை தவிசாளர் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி**

தெஹியோவிட்ட பிரதேச சபை தவிசாளர் தேர்தலில் 17-17 என்ற கடும் போட்டிக்கு மத்தியில், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் சமனசிரி வீரசிங்கே, சீட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்று தவிசாளர் பதவியை கைப்பற்றினார்.

அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தமிது ஷமிந்தவுடன் போட்டியிட்டார். இரு வேட்பாளர்களுக்கும் சமமான ஆதரவு கிடைத்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க முடியாமல், வழமையான முறைப்படி சீட்டு குலுக்கல் நடைபெற்றது.

கடந்த வாரம் மதகம பிரதேச சபையில் இதேபோன்ற வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, NPP கட்சிக்கு இது இரண்டாவது எதிர்பாராத வெற்றியாகும். இதன்மூலம் அவர்களின் உள்ளூராட்சி மட்டத்தில் செல்வாக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button