News

அமைதிக்கான நோபல் பரிசை  டொனால்ட் டிரம்பிற்கு  வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள்.

அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு  வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை பாராட்டி அவர் இதனை ட்ரம்பிற்கு பரிந்துரைத்துள்ளார்.



இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை நெதன்யாகு வழங்கினார்.

‘நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. ஜனாதிபதி ட்ரம்ப் அதைப் பெற வேண்டும்’ என்று நெதன்யாகு கூறினார்.

குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ட்ரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.  

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button