News

வெலிகம பிரதேச சபையை யார் கைப்பற்றுவது என்ற அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், வெலிகம பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினரின் வீடு மீது துப்பாக்கி சூடு

வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது துப்பாக்கிச் சூடு: காயங்கள் இல்லை

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தாரக நநாயக்காரவின் வீடு மீது இன்று அதிகாலை (16) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாவது, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்தச் சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தேர்தல் தொடர்பான அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம், இரண்டு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, தவிசாளர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கடத்தல் விவகாரத்தில் இதுவரை எவ்வித கைதுகளும் நடைபெறவில்லை.

, தேர்தல் செயல்முறையை சீர்குலைப்பதற்கும், புதிய நிர்வாகம் அமைப்பதைத் தடுப்பதற்கும் அரசாங்கமே இந்தக் கடத்தல்களைத் திட்டமிட்டு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

வெலிகம உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் NPP வெற்றி பெற்றிருந்தாலும், பிரதேச சபையை தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்துவதற்கு தேவையான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை.

இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியே வெலிகம உடுகாவ பகுதியில் உள்ள   வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

                                  

இந்த, துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button