இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை நடத்த முடியும்?

இன்றைய இளைஞர்கள் திருமணத்தின் கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள், மேலும் அவர்களின் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள் என பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்தார்.
தேவாலயத்தில் நடந்த ஒரு பிரார்த்தனையின் போது பேராயர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எனவே, திருமண வாழ்க்கை பெரும்பாலும் ஒரு தற்காலிக அனுபவமாகவே உணரத் தொடங்கியுள்ளது.அது மட்டுமல்லாமல், இன்று பல்வேறு திரிபு பட்ட மனப்பான்மைகள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன.
வெளிநாடுகளில் நடக்கும் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்வது, இரண்டு பெண்கள் திருமணம் செய்வது போன்ற ஓரினச்சேர்க்கை திருமணங்கள் இங்கும் நடக்கும் நிலையை எட்டியுள்ளது.இலங்கையிலும் இதுபோன்ற விஷயங்களைப் பிரச்சாரம் செய்ய சில அமைப்புகளும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இது ஒரு மனித உரிமை என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எப்படி ஒரு மனித உரிமையாக இருக்க முடியும்? இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தைத் தொடங்க முடியும்? அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற முடியும்?
கணவனும் மனைவியும் முதன்முதலில் சந்தித்தது சில சமயங்களில் மனைவியின் வீட்டில்தான், அங்கு பெற்றோர் பேசுவதற்காக கூடி திருமணங்களை நிச்சயம் செய்தனர்.
“அப்படி நடந்த திருமணங்கள் இன்றைய திருமணங்களை விட வெற்றிகரமாக மாறிவிட்டன. கணவன் மனைவி நண்பர்களாக திருமணம் செய்து கொள்ளும்போது, அது பிரிந்து போகும் வாய்ப்பு அதிகம் என அவர் குறிப்ப்பிட்டார்.

