News

சாரதி பஸ்ஸை தறிகெட்டு செலுத்திச் சென்ற விதத்தை பார்த்து பயந்த பயணிகள் தகவல் வழங்கி சுற்றிவளைத்து நிறுத்திய பொலிஸார்.

மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை இன்று (03) காலை

நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் .



திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பஸ் வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர் கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



சாரதியின் நடத்தை குறித்து பஸ்ஸில் பயணித்தவர்கள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.



இதனையடுத்து, குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மேலும் குறித்த பஸ்ஸில் சாரதி இருக்கையில் பின்புறம் சந்தேக நபர் பயன்படுத்திதிய போத்தலில் மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button