News

Video > மித்தேனியாவில் இருந்து மீட்கப்பட்ட கொள்கலன், 323 சிவப்பு லேபிள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட காலப்பகுதியில் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள், கடந்த ஜனவரி மாதம் நாட்டில் சுங்க நெரிசல் இருந்த நேரத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி,

தொடர்புடைய ரசாயனத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் ஜனவரி 26 ஆம் தேதி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

சுங்க நெரிசல் காரணமாக கொல்கலன்களை பதிசோதிக்காமல் விடுவிக்க ஜனவரி 18ம் திகதி தீர்மானிக்கப்பட்டனை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சுங்கத்திணைக்களம் ரெட் லேபல் கண்டெயினர்களை ஜனவரி 29 ம் திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதி வரை விடுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிவப்பு கிரீன் லேபல் ஒட்டப்பட்ட கண்டைனர்கள் அதற்கு முன்னர் வெளியாகியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்யப்பட்டதாகவும்,உப்பும் இந்த இரசாயனங்களும் தோற்றத்தில் ஒத்தவை என்றும் அவர் கூறும் அதேவேளை உப்பும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்ய பயன்படும் இரசாயணமும் குளோரைட் வகையை சேர்ந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கைக்கு உப்பு தட்டுப்பாடு ஏற்பட்ட போது இறக்குமதி செய்யப்பட முதல் உப்புத்தொகுதி இந்தியாவில் இருந்து ஜனவரி 27ம் திகதி இலங்கை துறைமுகத்தினை வந்தடைந்து அதே தினத்தில் சுங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இந்த சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Recent Articles

Back to top button