News
கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் அங்கு வைத்து கொலை செய்யப்பட்டார்

கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொலையாளி இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய காவல்துறையினர் இன்டர்போல் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார குறிப்பிட்டுள்ளார்.



