News

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.



2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதியாகவும் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற நபருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்.


இதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ரயான் ரூத் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button