News

“தேசிய மக்கள் சக்தியிலும் திருடர்களே இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.. ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல..”

எதிர்க்கட்சியினரின் நோக்கம் பொய்களைக் கூறி, அரசாங்கமும் தங்களைப் போலவே தவறு செய்யும் ஒரு குழுவினர் என்ற சமூகக் கருத்தை உருவாக்குவதே என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

“அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொண்டு எங்களை விடச் சிறந்த மனிதர்களாக மாறுவதற்குப் பதிலாக, பொய்களைக் கூறி சத்தமிட்டு, நாங்களும் அவர்கள் செய்த தவறுகளைச் செய்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் வருடம் முழுவதும் பாடுபடுகிறார்கள்.

எமது நாட்டு மக்களுக்கு விக்ரமசிங்கக்கள், பிரேமதாசாக்கள் மற்றும் ராஜபக்சக்களின் 40-50 வருட கால ஆட்சி முறையே தெரியும். எனவே, அரசியல்வாதிகள் என்பவர்கள் திருடர்கள், பொய்யர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை வழங்குபவர்கள் (nepotism) என மக்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திலும் அப்படிப்பட்டவர்களே இருக்கிறார்கள் என அவர்கள் கருதுகிறார்கள். எங்களிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நாம் சுயகட்டுப்பாட்டுடன் எம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சியாகும்.”

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

Recent Articles

Back to top button