News
(கட்டுகஸ்தோட்டை) நவயலதன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மடவளையை சேர்ந்த அக்பர் முகம்மத் பர்சாத் காலமானார்.

(கட்டுகஸ்தோட்டை) நவயலதன்ன பிரதேசத்தில் இன்று (21) இரவு இடம்பெற்ற விபத்தில் மடவளையை சேர்ந்த அக்பர் முகம்மத் பர்சாத் (வயது 28) காலமானார்.
கட்டுக்கஸ்தோட்டை பகுதியில் இருந்து மடவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும்போது கெப் ரக வண்டி ஒன்றிலும் முச்சக்கர வண்டியிலும் மோதி படுகாயமடைந்த நிலையில் கட்டுக்கஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பாட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மடவளை கோங்காமதொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த இவர் ஜனாப் ஹுசைன் அக்பர் அவர்களின் புதல்வர் ஆவார்.



