சிறிய கடையொன்றை உடைத்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடிய குற்றத்தில் மூன்று சிறுமிகள் பொலிஸாரால் கைது

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வாவின் தலைமையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்ததன் மூலம் குறித்த சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய டொபிக்கள் , சாக்லேட்கள் லொலிபொப் , சூயிங்கம் , பெப்பர்மிண்ட் ,ஆகிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:
இச்சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



