News
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஆயுதப் படைகள் அமைப்பு அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஆயுதப் படைகள் (IRGC) அமைப்பின் தலைமை தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்கா தமது பெரும்பாலான விமானங்களை சைப்ரஸில் நிறுத்தியுள்ளது. அவர்களை வெளியேற்ற பல ஏவுகணைகளை ஏவுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரானின் விரோதப் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனடியாக எவ்வித பதிலும்; தெரிவிக்கவில்லை.
