News
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பெயரிடப்பட்டார்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இத்தகைய பின்னணியிலேயே அவரை மூன்றாவது சந்தேக நபராக பெயரிட்டுள்ளதாக கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.



