News

“பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான்  அறிவித்தது.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரானின் காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சொல்ஃபாகரி (Ebrahim Solfaghari) தெரிவிக்கையில்,

ஈரான் வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அமெரிக்கர்கள் ஒரு “வலிமிகுந்த பதிலடிக்கு” தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வங்கிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டாம் என பிராந்திய மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய தலைமை போரை பிராந்தியம் முழுவதும் விரிவுபடுத்த முயற்சிக்கும் பின்னணியில் இந்த நிலைமை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஈரானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மோதல்கள் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், உலக எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை விடுவிக்க முன்மொழிந்துள்ளது.

குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அண்டை நாடுகள் ஈரான் தொடுத்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஈரானுக்குள் உள்நாட்டு அமைதியின்மையும் அதிகரித்து வருகிறது. நாடுகடத்தப்பட்டுள்ள இளவரசர் ரேசா பஹ்லவி, ஈரானிய மக்களைத் தத்தமது வீடுகளுக்குள் இருக்குமாறும், “இறுதிப் போராட்டத்திற்கு” தயாராகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக லண்டனில் நடைபெறவிருந்த வருடாந்த ‘குத்ஸ் தின’ (Quds Day) ஊர்வலத்தைத் தடுத்திருக்க பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recent Articles

Back to top button