News

ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்ததால் அதனை மற்ற ஸ்கூட்டரில் ஏற்றிச்சென்ற மஹியங்கனை நண்பர்கள்

எரிபொருள் தட்டுப்பாடு மனிதர்களை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்பதற்குச் சான்றாக, மஹியங்கனை பகுதியில் அரங்கேறிய வினோதமான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

பெட்ரோல் நிலையங்களை சல்லடை போட்டுத் தேடிய இரு நண்பர்களுக்கு, இறுதியில் ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது. மற்றைய ஸ்கூட்டர் பாதியிலேயே ‘டல்’ அடிக்க, அதை அங்கேயே விட்டுச் செல்ல மனமில்லாத அந்த இளைஞர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.

ஒரு ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல, மற்றைய ஸ்கூட்டரை இருவருக்கும் இடையில் லாவகமாகச் சமநிலைப்படுத்தி ஏற்றிச் செல்லும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“ஒரு வண்டிக்குத்தான் பெட்ரோல் கிடைச்சது, அதான் மத்த வண்டியையும் இதுலேயே ஏத்திக்கிட்டு அடுத்த ஷெட்டுக்குத் தேடிப் போறோம்” என அந்த இளைஞர்கள் வீடியோவில் கூலாகத் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனையில் பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் படும் அவஸ்தையையும், அவர்களின் சமயோசித புத்தியையும் ஒருசேரக் காட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகின்றது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button