News

ஜனாஸா அறிவித்தல் – மடவளையை பிறப்பிடமாகவும் தற்போது அக்குறனையில் வசித்துவரும் அக்பர் அவர்களின்  புதல்வன் மொஹம்மட் அர்கம் (26) காலமானார்

மடவளையை பிறப்பிடமாகவும் அக்குரனை 9ம் கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அக்பர் அவர்களின் அன்பு புதல்வன் மொஹம்மட் அர்கம் (26 வயது) அவர்கள் அக்குறனையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மடவலை பசார் புளியமரத்தடியை சேர்ந்த ரிஸ்வி அவர்களின் சஹோதரரின் புதல்வனும் ஆவார்.

சிறுவயது முதல் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அன்னாரின் ஜனாசா இன்று 4.30 மணிக்கு 9ம் கட்டை இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button