News
இலங்கையில் பிறை தென்படவில்லை – ரமலான் மாதம் 30 நாட்களாக பூரணப்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி சனிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்

இலங்கையில் பிறை தென்படவில்லை – ரமலான் மாதம் 30 நாட்களாக பூரணப்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி சனிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியானது
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2026 மார்ச் மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில், ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2026 மார்ச் 21ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் 01ஆம் பிறை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.



