News

பெட்ரோல் மீதான கூடுதல் வரியைக் குறைக்கவும், டீசலுக்கு அதனை முழுமையாக நீக்கவும் இந்தியாவின் மோடி அரசாங்கம் தீர்மானித்துள்ளது போல் இலங்கை அரசாங்கமும் செய்ய வேண்டும் என சஜித் வேண்டுகோள்

சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கமும் எரிபொருள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.


நுகர்வோர் மீதான சுமையைத் தணிக்கும் வகையில் பெட்ரோல் மீதான விசேட கூடுதல் கலால் வரியைக் குறைக்கவும், டீசல் மீதான வரியை முழுமையாக நீக்கவும் மோடி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


“இந்திய நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் குறைப்பதற்காக பெட்ரோல் மீதான விசேட கூடுதல் கலால் வரியைக் குறைக்கவும், டீசலுக்கு அதனை முழுமையாக நீக்கவும் மோடி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இதனைப் பின்பற்றுவதற்கு இதுவே பொருத்தமான தருணம்” என பிரேமதாச ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தற்போதைய போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை உட்பட பல நாடுகள் அவசரகால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button