கூலித் தொழிலாளியின் மகளாக பிறந்தும், அடிப்படை வசதிகள் பல இன்றியும், கல்வியே வாழ்க்கையை மாற்றும் என்பதை நிரூபித்துள்ளார் யாக்கூப் பாத்திமா பஸ்ரின்

கூழித் தொழிலாளியின் மகளாக பிறந்தும், அடிப்படை வசதிகள் பல இன்றியும், கல்வியே வாழ்க்கையை மாற்றும் என்பதை நிரூபித்துள்ளார் யாக்கூப் பாத்திமா பஸ்ரின் 💫
பிறைந்துரைச்சேனை மண்ணின் பெருமை ✨
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை 2ம் குறுக்கு வீதியில் வசிக்கும்
யாக்கூப் & பரீனா தம்பதியினரின் புதல்வியான இவர்,
📚 ஆரம்பக் கல்வியை (1 தொடக்கம்11 வரை)
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலத்தில்
🎓 உயர்தரக் கல்வியை
மட்/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் பயின்றுள்ளார்.
O/L பரீட்சையில்
7A, 2B என்ற சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இவர்,
2025 உயர் தரப் பரீட்சையில்
கலைத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4ஆம் இடம் பெற்று,
சட்டத்துறைக்கு (Law) செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்!
“வறுமை ஒரு தடையல்ல, மன உறுதியே வெற்றியின் ரகசியம்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
🤲 எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
அல்ஹம்துலில்லாஹ்!





