News
ஈரானுக்கு எதிராக கடல்வழியை முற்றுகை செய்து விட்டோம் – இனிமேல் உலக நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை சார்ந்திருக்காமல் சவுதி அரேபியா, ரஷ்யாவை விட அதிக எண்ணெய் வளம் உள்ள அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்வனவு செய்யுங்கள் என ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமெரிக்க அமுல்படுத்தியுள்ளதால் ஈரான் இனி மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியா, ரஷ்யாவை விட அதிக எண்ணெய் வளம் அமெரிக்காவிடம் உள்ளதால், உலக நாடுகள் இனி அமெரிக்காவிலிருந்து எண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



