News
ஈரானிடம் இனிமேல் அணு ஆயுதம் இருக்காது என அந்நாடு ஒப்புக் கொண்டுவிட்டது – அமெரிக்க – ஈரான் ஒப்பந்தம் விரைவில் எட்டப்பட போகிறது ; ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானிடம் இனிமேல் அணு ஆயுதம் இருக்காது என்று அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக நெருக்கமாக” இருப்பதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“மிக முக்கியமானது என்னவென்றால், ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் அவர்கள் அதை மிகவும் வலிமையாக ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
“பி2 போர் விமானங்கள் (B2 bombers) மூலம் நாம் நடத்திய தாக்குதலால் நிலத்தடியில் ஆழமாக இருக்கும் அணுக்கழிவுகளை (nuclear dust) எங்களிடம் திருப்பித் தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.


