News
உலக வரைபடத்திலிருந்து ஈரானை அகற்ற போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

உலக வரைபடத்திலிருந்து ஈரானை அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்க கப்பல்களை இலக்கு வைத்தால் இந் நிலை உருவாகும் என தொலைபேசி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

