News

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இ. போ. ச. பேருந்தும் மோதி கோர விபத்து

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி கோர விபத்து
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button