தமிழக முதல்வர் விஜய்க்கு, ஜனாதிபதி குமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியது இராஜதந்திர நெறிமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அනුர குமார திஸாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி இராஜதந்திர நெறிமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாநிலமான தமிழகத்தின் முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்ததைக் கண்டு தான் “ஆச்சரியமடைவதாக” ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அரச தலைவர் என்ற ரீதியில், இத்தகைய வாழ்த்துச் செய்திகள் பொதுவாக சக அரச தலைவர்களுக்கே வழங்கப்படுமென்றும், வெளிநாட்டு மாகாண அல்லது மாநிலத் தலைவர்களுக்கு அல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய இந்திய மாநிலத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க ஏன் இதேபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி திஸாநாயக்க, இலங்கையும் தமிழகமும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டிருந்ததுடன், பரந்த இந்தியா-இலங்கை பங்காளித்துவத்திற்குள் வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



