இந்நாட்டு விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – விவசாயிக்கு இடியே விழுந்தாலும் அரசுக்கு கவலையில்லை : நாட்டில் காணப்படும் ஒரே மாற்றுச் சக்தி எமது ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி மட்டுமே ; சஜித்
நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை என்னிடம் முன்வைத்து, அவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டுக் கொண்டதற்கு ஏற்ப, நான் பல கேள்விகளை எழுப்பியருக்கிறேன். இவ்வாறு அண்மையில் எழுப்பிய கேள்விக்கு விவாசயத் துறைக்கு பொறுப்பான அமைச்சர், விவசாயிகளுக்கு அவ்வாறான எந்த பிரச்சினைகளும் இல்லை ஏன்றே பதிலளித்தார்.
விதை நெல்லுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்று அண்மையில் கூட நான் கூறியிருந்தேன். இன்று விதை நெல்லுக்கும் உத்தரவாத விலை இல்லை.
இந்த அரசாங்கம் விவசாயிகளை முன்னேற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தாலும் இன்று விவசாய மக்களின் வாழ்க்கை முற்றிலும் வீழ்ச்சி நிலைக்கே இட்டுச்சென்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நெல் தட்டுப்பாடு, நெல்லுக்கான உத்தரவாத விலை, உரத்தட்டுப்பாடு என்பன தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் சமயங்களில் அத்தகைய எந்த பிரச்சினைகளும் இல்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சர்வ சாதாரணமாக தெரிவிக்கிறார்.
விவசாய மக்கள் இன்று வெறுப்படைந்திருக்கின்றனர். சொத்துக்களை அடமானம் வைத்து விவசாய நடவடிக்கைகளைச் செய்தாலும் விளைச்சலுக்கு ஏற்ற நல்ல உத்தரவாத விலையோ நிலையான விலையோ அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆனமடுவ தேர்தல் தொகுதியில் நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவின் இஜினிமிட்டிய வட்டாரத்தில் இன்று (13) இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவுகூட விவாசய அமைச்சருக்குத் தெரியாது.
ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு விவசாயிக்கு ரூ.130-135 மட்டத்தில் செலவாகின்றன. அமைச்சரின் கூற்றுப்படி இதற்கு ரூ.90-95 வே செலவாகின்றனவாம். உரம், எரிபொருட் செலவு, விவசாய இரசாயன பதார்த்தங்களின் விலைகள் என்பன தற்சமயம் அதிகரித்து காணப்படுகின்றன.
இவை தரமானவைகாளாவும் இல்லை. 14% ஈர நெல்லை ரூ.120க்கு கொள்வனவு செய்வோம் என்று கூறினாலும் இன்று அது நடந்தபாடில்லை. ரூ.150 உத்தரவாத விலையை சட்டமாக்கித் தருவோம் என்ற தேர்தல் காலத்தில் மேடைகள் எங்கும் முழங்கினர். இன்று அதனையும் பெற்றுக் கொடுத்த பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
2019, 2024 என இரு முறையும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.
2019 இல் போலவே, 2024 இலும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். விவசாயிகளின் தோள்களில் ஏறி ஜனாதிபதி பதவியும் அமைச்சர் பதவியும் பெற்ற அனைவரும் இன்று அரியணைகளில் அமர்ந்து விவசாயிகளை மறந்துவிட்டனர். யார் யாரெல்லாம் எந்தெந்த முழக்கங்களை எழுப்பினார்களோ அவர்களே இன்று விவசாயிகளை மறந்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இடியே விழுந்தாலும் அமைச்சருக்கு கவலையில்லை.
யானை மனித மோதல், உற்பத்திச் செலவுகள் செலவுகள் அதிகரித்திருக்கும்போது கிடைக்க வேண்டிய உத்தரவாத விலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். பொறுப்பான அமைச்சருக்கு விவசாயத்தின் சுழற்சியே புரியவில்லை. விவசாயிக்கு இடியே விழுந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. முடியுமென்றால் இந்த அமைச்சர்கள் விவசாயிகள் மத்தியில் சென்று பிரச்சினைகளை ஆராயுமாறு நாம் அமைச்சருக்கு சவால் விடுகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அமைச்சர்களுக்கு மக்கள் மத்தியல் செல்வதற்குப் பயம்!
இந்த அமைச்சர்களுக்கு இன்று மக்களிடம் வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறு. இந்த பொய்யர்களை மக்கள் இப்போது வெறுக்கிறார்கள். இப்போதாவது விவசாயிகளுக்காக உண்மையிலேயே முன்னெடுக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்கி அதை முன்னெடுப்போம்.
நாட்டில் காணப்படும் ஒரே மாற்றுச் சக்தியாக ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி, நாட்டின் அனைத்து விவசாய மக்களையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் விவசாயிகள் இயக்கத்தை உருவாக்குவோம். இதன் மூலம் விவசாய மக்களுக்காக புதிய சமூக உடன்படிக்கையையும், சாசனத்தையும் முன்வைத்து, விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய பக்கபலம், பாதுகாப்பு, மற்றும் ஆதரவை வழங்கி விவசாயிகளைக் காப்பாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு சாசனத்தை தயாரிக்கிறோம்.
விவசாய மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வண்ண தொப்பிகளை கழற்றிவிட்டு விவசாய மக்களுக்காக நேர்மையாக அர்ப்பணிக்கும் கட்சியையும் இயக்கத்தையும் இப்போதாவது தேர்ந்தெடுப்போம். விவசாயிகளை காப்பாற்றுவோம் என்று கூறிய தற்போதைய அரசாங்கம், IMF இன் கைப்பாவையாக மாறியுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இன்று IMF இன் சொல்படி ஆடுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயத்தை அழிப்பதற்கு எடுக்கும் கொள்கையைத் தோற்கடிப்போம்.
நமது நாட்டில் விவசாயம் தோல்வியடைந்த ஒன்று என்று சிலர் கூறுகின்றனர். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, விவசாயத்தை அழிப்பதற்குப் பதிலாக விவசாயத்தைப் பாதுகாக்கும் கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் நாம் பணிகளைத் தொடருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்



