“அரசாங்கத்தின் மீது உள்ள அன்பின் காரணமாகவே மக்கள் அரசாங்கத்தின் விமர்சிக்கின்றர்… வாக்களிக்காதவர்கள் கூட அரசாங்கத்தைப் பாராட்டுகிறார்கள்..
“மாலிமா (திசைகாட்டி) அரசாங்கம் வெற்றி பெற்ற கூட்டுறவுச் சங்கங்களின் அதிகாரம் கைநழுவிப் போனாலும், அதனை அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணையின் பின்னடைவாக தான் கருதவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் தேர்தல்கள் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் மாத்திரமே நடத்தப்படுவதாகவும், மக்கள் அரசாங்கத்தைத் திட்டுவது (விமர்சிப்பது) அரசாங்கத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாலிமா அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் பரப்பப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்தலில் வாக்களிக்காத மக்கள், குறிப்பாக கொழும்பில் உள்ள நடுத்தர வர்க்க மக்கள் கூட தற்போது அரசாங்கத்தின் பயணப்பாதை குறித்து திருப்தியடைந்துள்ளதால், அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை மேலும் வலுவடைந்துள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியின் (ரூபவாஹினி) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.”


