News
அரசியல் கட்சிகள் தமது கூட்டங்களில் அதிக ஜனத்தை காட்ட, பணம் செலுத்தி மனிதவள நிறுவனங்களின் சேவையை பெறுகின்றன ; வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஸ குற்றச்சாட்டு

அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்வதற்காக ஜனத்தை வழங்குவதற்கு மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் முழு நாள் நிகழ்வுக்கு ஒரு நபருக்கு 3,000 ரூபா அல்லது குறுகிய காலத்திற்கு 1,500 ரூபா வாழங்குகிறது
இவ்வாறுதான் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டத்தை கூட்டிச் செல்வதாக முன்னாள் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டிலுள்ள 5 மில்லியன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) வாக்காளர்களின் ஆதரவை மேற்கோள்காட்டி, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

