News
மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவானது – 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழப்பு
குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இதில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்தனர்.