தீர்மானித்த சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள் ; மனோ கணேசன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்

நிதானமாக சிந்தித்து தீர்மானித்த சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் இருந்து விடாதீர்கள்.
– தமுகூ தலைவர் மனோ கணேசன்
நடைபெற போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதி தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 (% ) விகிதமும், அதனுடன் மேலதிகமாக குறைந்த பட்சம் ஒரு (1) வாக்கும் பெற வேண்டும். ஆகவே ஒவ்வொரு வாக்கும் இங்கே முக்கியம் ஆகின்றது.
இது ஜனாதிபதி தேர்தல் என்பதால், முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதி ஆகிறது. வாக்குகள் எண்ண படுவது, அறிவிக்க படுவது மாவட்ட, தொகுதி மட்டங்களாக இருந்தாலும், இங்கே முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதி.
ஆகவே தாமதமின்றி காலையிலேயே சென்று வாக்கு அளியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒரு போதும் இருந்து விடாதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

