News
திருடப்பட்ட பதினெட்டு பில்லியன் டொலர்களை ராஜபக்ச உகாண்டாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்..

திருடப்பட்ட பதினெட்டு பில்லியன் டொலர்களை ராஜபக்ச உகாண்டாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்து குற்றச்சாட்டை முன்வைத்த குழுவே இன்று ஆட்சியில் இருப்பதாகவும், இது தொடர்பில் ஆராய்ந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அதன் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

