பஸ் கண்டக்டரை மரத்தில் கட்டிவைத்து அடித்தவர்கள்..
தனியார் பேருந்தொன்றில் நடத்துநராகக் கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டதாக கூறி கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியிலேயே இன்று (07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்தொன்றில் நடத்துநராக 27 வயது இளைஞர் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த பேருந்திலிருந்து பணத்தை கொள்ளையிட்டதாக நடத்துநர் மீது தனியார் பேருந்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அதன் பின் பாழடைந்த காணி ஒன்றிற்குள் நடத்துநரை இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கிச் சித்திரவதை செய்துள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்