News

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வரியை குறைக்கும் புதிய ஒப்பந்ததுக்கு செல்லும் வரை எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் ; சஜித்

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும் மக்கள் மீதான சுமையை குறைக்கும் வகையிலான புதிய ஒப்பந்தத்துக்கு தற்போதையை அரசாங்கம் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறான ஒப்பந்தத்தினூடாக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி சுமை குறையும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



“மேலும் அதனூடாக உறுதியான பொருளாதாரம் உருவாகும். தற்போதைய அரசாங்கம் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வரியை குறைக்கும் புதிய ஒப்பந்ததுக்கு செல்லும் வரை எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம்.



அதேபோன்று, வரி சுமையற்ற நாட்டை கட்டியெழுப்புவதே தற்போதைய ஜனாதிபதியின் பிரதான பொறுப்பாகும் “ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



கொழும்பு மன்றக்கல்லூரியில்  (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button