News

ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது போல், அரசாங்கம் கடன் எதுவும் பெறவில்லை – ஜனாதிபதியின் பொருளாதார, நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் வழங்கியுள்ள விளக்கம் இது தான்

அமைச்சுச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், தேவையான திறைசேரி பில்கள் மற்றும் பத்திரங்களை மீளச் செலுத்துவதற்கும் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து நிதியை பெற்றுக் கொள்வது ஒரு சாதாரண செயல் என என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டவும் அதன் சேவைகளை தொடரவும் நிதி தேவைப்படுகிறது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு வாரமும் மத்திய வங்கி நிதி திரட்டுகிறது.. இது  சாதாரணமாக இடம்பெறும் விடயம் என ஜயந்த மேலும் கூறினார்.

அரசாங்கம் உரிய தேதியில்  திருப்பிச் செலுத்துகிறார்கள். இது ஒரு வழக்கமான செயல்முறை, இது வழக்கம் போல் தொடர்கிறது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதால் இதில் சிறப்பு எதுவும் இல்லை” என்று அவர் விளக்கினார்.



புதிதாக கடன் வாங்கப்படவில்லை என்று கூறிய இவர் , உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து அரசாங்கம் கடன் பெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஆராயப்பட வேண்டும் என்றார்.

“நடப்பது சாதாரண நிதி சேகரிப்புதான். அது தவிர, உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து சிறப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான நிதி திரட்டல் எதுவும் இல்லை,” என்றார்.

நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி பொறுப்பு என்றும், இதனை அடைவதற்கு அண்மையில் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஜயந்த குறிப்பிட்டார்.

அண்மையில் அமெரிக்க டாலர்கள் வாங்கப்பட்டது, புதிய ஜனாதிபதியின் நியமனத்திற்கு முன்னதாக செய்யப்பட்டது. அதையும் நாம் ஆராய வேண்டும். உள்நாட்டு சந்தையில் இருந்து எவ்வளவு பணம் திரட்டப்பட்டது என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், ”என்று சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த மேலும் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button