News
வெடிகுண்டு பீதி; கட்டுநாயக விமான நிலையத்தில் விசேட சோதனை ..

வெடிகுண்டு பீதி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புதான் அதற்குக் காரணம்.
அதன்படி, மும்பை விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பிற்பகல் 3.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானப்படை, கமாண்டோ படை, போலீஸ் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் இருந்த 240 பயணிகளும் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

