News

தோற்றால் வீட்டில் இருங்கள் ; ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரவின் நோஸ்கட்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

அனுர குமார திஸாநாயக்க இதை மறுத்தார்,

ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தால் அத்தகைய ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினார். “முந்தைய நிர்வாகத்தால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நீங்கள் தோற்றிருந்தால், தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்,” என்று தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க , திட்டமிட்ட சம்பள அதிகரிப்பை தொடருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களுக்கு மேல் உள்ளவாறு  பதிலளித்தார்.

ரணில் விக்கிரமசிங்க முன்னர் கூறியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறப்படும் கூற்றுக்களையும் அனுரகுமார திஸாநாயக்க மறுத்தார்

NPP இன் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார், “இந்த நாட்டிற்கான எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை நாங்கள் எமது முயற்சிகளை  நிறுத்த மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker