News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள போதும் எந்த இலங்கையரும் இதுவரை நாடு திரும்புவதற்கு கோரவில்லை ;  வெளிவிவகார அமைச்சு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வர விரும்பும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், யுத்த மோதல்கள் காரணமாக இதுவரையில் எந்தவொரு இலங்கையர்களும் நாடு திரும்புவதற்கு கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button