News

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய எந்தவொரு கொண்டாட்டங்களையும் நடத்துவதற்கான அனுமதி இல்லை

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய எந்தவொரு கொண்டாட்டங்களையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பு நாட்டின் சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அதன் சின்னம், சீருடை, உறுப்பினர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது என்கிறார்.

அப்படியிருந்தும், வடக்கு, தெற்கு, கிழக்கு, என எதுவாக இருந்தாலும், போரினால் உயிரிழந்த தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல சந்தர்ப்பங்களில், வடக்கு மக்கள் உறவினர்களை நினைவுகூருவதற்கு வேறு அர்த்தத்தை வழங்குகிறார்கள், ஆனால் புலிகள் பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் கொண்டாடுவதற்கு இடமில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker